யாழ்.பருத்தித்துறை கடலில் 12 பேர் கைது! சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை கடலில் 12 பேர் கைது! சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு..

யாழ்.பருத்தித்துறை கடற்பகுதியில் உரிய அனுமதிப்பத்திரமில்லாமல் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 வெளிமாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது தொழிலுக்குப் பயன்படுத்தி 4 படகுகளும் அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்களும் 500 இற்கு மேற்பட்ட கலட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மன்னார் மற்றும் புத்தளம் மீனவர் 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு