நாட்டில் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளபோதும் அச்சுறுத்தும் வகையில் தொற்று அதிகரிப்பு..! நேற்றும் 3103 பேருக்கு தொற்று, 40 பேர் மரணம்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ளபோதும் அச்சுறுத்தும் வகையில் தொற்று அதிகரிப்பு..! நேற்றும் 3103 பேருக்கு தொற்று, 40 பேர் மரணம்..

நாட்டில் நேற்றய தினம் மட்டும் சுமார் 3103 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், 40 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. 

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து இரண்டாயிரத்து 357ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 40 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில், 23 ஆண்களும் 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட 

மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் கட்டுப்பாடு இறுக்கமாக்கப்பட்டுள்ளபோதும் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு