கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்ற பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி!

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்ற பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் சடலத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்ற பொலிஸ் அதிகாரியின் வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் அட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

ஹட்டனில் இருந்து கண்டி இராணுவ முகாமில் ஒப்படைப்பதற்காக கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவருடைய சடலம் கொண்டுச் சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்க சென்ற 57 வயதான எஸ்.பெனடிக் 

என்ற பொலிஸ் அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார். உப பொலிஸ் பொறுப்பதிகாரி பயணம் செய்த வாகனம் வட்டவளை கரோலினா தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் உப பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் 3 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வாகன சாரதி, சடலத்தின் உறவினர்கள் இருவர் ஆகியோர் காயமடைந்த நிலையில் 

வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு