யாழ்.மாவட்டத்தில் நாளை காலை தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம்..! மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் நாளை காலை தொடக்கம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம்..! மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு..

யாழ்.மாவட்டத்தில் இடர்கால கொடுப்பனவு 5 ஆயிரம் ரூபாய் நாளை தொடக்கம் வழங்கப்படும். என மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

இடர் காலத்தில் அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு நாளையிலிருந்து யாழ் மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது.

அதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் சுமார் 75,000 குடும்பங்களுக்கு அதாவது சமுர்த்திபெற்று 

வருகின்ற குடும்பங்களுக்கும் அத்தோடு வருமானம் குறைந்த 38 ஆயிரம் குடும்பங்கள் உட்பட மொத்தமாக ஒரு லட்சத்து 52 ஆயிரம் குடும்பங்களுக்கு 

இந்த 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. நாளையதினம் அந்தந்த பிரிவில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

எனினும் தற்போது பயணத் தடை அமுலில் உள்ளதன் காரணமாக கடந்த காலங்களைப் போன்று சிலவேளைகளில் அந்தந்த பகுதி அரச உத்தியோகத்தர்களினால் 

வீடுகளுக்குச் சென்று அந்தக் கொடுப்பினை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்படுகின்றது என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு