கணவாய் தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளி மாரடைப்பால் மரணம்!

ஆசிரியர் - Editor I
கணவாய் தொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளி மாரடைப்பால் மரணம்!

கணவாய் பிடிப்பதற்காக கடலுக்கு அடியில் வலைகளை கட்டுவதற்காக கடலுக்கு சென்ற கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - காக்கை தீவு பகுதியை சேர்ந்த கனகராசா சுரேஷ்குமார் (வயது 39)  என்பவரே உயிரிழந்துள்ளார்.

காக்கை தீவு பகுதியில் இருந்து தனது சக தொழிலாளிகள் ஐவருடன் கணவாய் பிடிப்பதற்கான வலைகளை கடலுக்கு அடியில் கட்டுவதற்காக கடலுக்கு படகில் சென்றுள்ளார்.

படகில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக சக தொழிலாளிகள் படகை கரைக்கு திருப்பி வைத்தியசாலைக்கு அவரை அழைத்து சென்ற போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிக்கையிட்டனர்.

உடற்கூற்று பரிசோதனையின் போது மாரடைப்பால் மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு