ஹலால்துறை விடுத்துள்ள அறிவிப்பு..! நாடு முழுவதும் உள்ள சகல மதுபானசாலைகளுக்கும் சீல்..

ஆசிரியர் - Editor I
ஹலால்துறை விடுத்துள்ள அறிவிப்பு..! நாடு முழுவதும் உள்ள சகல மதுபானசாலைகளுக்கும் சீல்..

நாடு முழுவதும் உள்ள சகல மதுபானசாலைகளுக்கும் சீல் வைக்கப்படும் என ஹலால்துறை அறிவித்திருக்கின்றது.

பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் உரிமம் பெற்ற சகல மதுபானசாலைகளுக்கும் சீல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்து கலால் செய்தித் தொடர்பாளர் கபில குமாரசிங்க கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 

அனைத்து மதுபானசாலைகளையும் சீல் வைக்க கலால் ஆணையாளர் அனைத்து மாகாண மற்றும் மாவட்ட கலால் ஆணையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை மதுபானசாலைகளை மூடுமாறு அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இருந்தபோதிலும் நாட்டின் சில பகுதிகளில் மதுபானசாலைகள் திறக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு