யாழ்.மாவட்டத்தில் மீண்டும் ட்ரோண் கமரா மூலம் கண்காணிப்பு..! கோப்பாய் பகுதியில் இன்று காலை ஆரம்பம், பொதுமக்கள் அவதானம்..
யாழ்.மாவட்டத்தில் முழுநேர பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் மாவட்டத்தில் மீண்டும் ட்ரோண் கமராக்கள் மூலம் கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் காலை கோப்பாய் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான பொலிஸாரும், விமானப்படையினரும் இணைந்து
ட்ரோண் கமராக்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் யாழ்.நகரப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம்
10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.