தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்க நாம் தயாராக இல்லை. VIDEO

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்க நாம் தயாராக இல்லை. VIDEO

தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்கிறார்கள் என நாங்கள் தேர்தல் மேடைகளில் அடையாளம் காட்டய தரப்புக்களுடன் கூட்டு சேர்வது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். அந்த துரோகத்தை செய்வதை விட எந்த சபையிலும் ஆட்சியமைக்காமல் விட்டதை நாம் மகிழ்வுடன் வரவேற்கிறோம். 

மேற்கண்டவாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கூறியுள்ளார். உள்ராட்சிசபை தேர்தலின் பின்னான நிலமைகள் குறித்து இன்று மாலை யாழ்.ஊடக அமையத் தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழ்தேசிய கூட்டமைப்பைபோல் மற்றய தரப்புகளின் ஆதரவை பெற் று நாங்களும் பல சபைகளில் ஆட்சியமைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் தமிழ் மக்களுக்கு துராகமிழைத்த, துரோகமிழைத்துக் கொண்டிருக்கும் தரப்புக்கள். 

இதனையே நாங்கள் தேர்தல் மேடைகளில் மக்களுக்கு அடையாளம் காட்டினோம். அவ்வாறு தேர்தல் மேடைகளில் அடையாளம் காட்டிவிட்டு பின்னர் ஆட்சியமைப்பதற்காக அவர்களுடனேயே கூட்டு சேருவது அப்பட்டமான துரோகம். அவ்வாறான துரோகத்தை செய்ய நாங்கள் தயாராக இல்லை. 

இதனாலேயே நாங்கள் ஆட்சியமைக்கும் எண்ணத்தை அடியோடு கைவிட்டோம். இதற்காக தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆட்சியமைக்க தெரியாது என்றோ, ஆட்சியமைக்க விருப்பமற்றவர்கள் என்றோ அர்த்தம் கிடையாது. யாழ்.மாநகரசபையில் நாங்கள் ஈ.பி.டி.பிக்கு ஆதரவளித்திருந்தால் கூட்டமைப்பு ஆட்சியமைத்திருக்குமா?

ஆனால் அதனை நாங்கள் செய்யவில்லை. செய்யப்போவதுமில்லை. நாங்கள் கொள்கையுடன் மக்களுக்கு துரோக மிழைக்காமல் செயற்பட விரும்புகிறோம். ஆகவே மக்கள் மிக சிறந்த ஒரு வாய்ப்பை மீண்டும் ஒரு தடவை த ருவார்கள். மேலும் நாங்கள் எவருடனும் கூட்டு சேராத நிலையில் சிலருடைய சுயரூபங்களை மக்கள் இப்போது பார்த்துள்ளார்கள் என்றார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு