மக்களின் செயற்பாடு கவலையளிக்கிறது..! பயணத்தடை இனிமேல் தளர்த்தப்படாது, மாற்று நடவடிக்கை என்கிறார் இராணுவ தளபதி..

ஆசிரியர் - Editor I
மக்களின் செயற்பாடு கவலையளிக்கிறது..! பயணத்தடை இனிமேல் தளர்த்தப்படாது, மாற்று நடவடிக்கை என்கிறார் இராணுவ தளபதி..

நாடு முழுவதும் பயணத்தடை தளர்த்தப்படும்போது மக்கள் நடந்துகொண்ட விதம் கவலையளிப்பதாக கூறியிருக்கும் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணயின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, 

பயணத்தடையை தளர்த்தியதையிட்டு மகிழ்ச்சிப்பட முடியாத நிலையில் தாம் இருப்பதாகவும் பயணத்தடை தளர்த்தும் நடைமுறை எதிர்வரும் நாட்களல் இருகாமல் கூட போகலாம் எனவும் கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறகையில், 

எதிர்காலத்தில் கடைகளைத் திறப்பதற்கு பதிலாக நாங்கள் ஒரு மாற்று நடவடிக்கையை செயற்படுத்த வேண்டியிருக்கு என்றார். இதன்படி மொபைல் சேவை வாகனங்களைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதில் 

கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது என்றார்.அருகிலுள்ள கடையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கான வாய்ப்பை சிலர் தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது என்றும் இதுபோன்ற தவறான செயல்பாடுகளால் 

மக்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.இத்தகைய செயற்பாடுகள் கொரோனாவின் பரவலை அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு