நாட்டை 14 நாட்களுக்கு முடக்குங்கள்..! கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி ஜனாதிபதிக்கு கடிதம்..

ஆசிரியர் - Editor I
நாட்டை 14 நாட்களுக்கு முடக்குங்கள்..! கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி ஜனாதிபதிக்கு கடிதம்..

நாட்டை 14 நாட்களுக்கு பூரணமாக முடக்கும்படி தேசிய கொவிட் கட்டுப்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சர், வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தி மோர்ணிங் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இதேவேளை தி சண்டே மோர்ணிங்த சண்டே மோர்னிங்கிற்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் எஸ். முனசிங்க 14 நாள் மூடுவது குறித்து முடிவு செய்ய ஒரு சிறப்பு கூட்டம் உள்ளது என்று கூறினார். 

முழுமையாக 14 நாட்கள் மூடுவது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. தற்போது முன்னர் அறிவிக்கப்பட்டவை மட்டுமே தற்போது என்னால் கூற முடியும் என தெரிவித்துள்ளார். இதேவேளை அரச மருத்துவ சங்கங்கமும் 14 நாட்கள் 

முழுமையான பூட்டுதல் அல்லது ஊரடங்கு உத்தரவு விதிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு