நாடு முழுவதும் அமுலில் உள்ள முழுநேர பயணத்தை நீடிக்கப்படுமா..? இராணுவ தளபதி விளக்கம், அடுத்த சில நாட்களில் ஜனாதிபதியுடன் உயர்மட்ட கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் அமுலில் உள்ள முழுநேர பயணத்தை நீடிக்கப்படுமா..? இராணுவ தளபதி விளக்கம், அடுத்த சில நாட்களில் ஜனாதிபதியுடன் உயர்மட்ட கலந்துரையாடல்..

நாடு முழுவதும் நேற்றய தினம் இரவு அமுலான முழுநேர பயண கட்டுப்பாட்டை நீக்குவதா? நீடிப்பதா? என்பது குறித்து 25ம், 26ம், திகதிகளில் அல்லது 27ம் திகதி ஜனாதிபதியுடன் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெறும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

இன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், அடுத்த வார இறுதியில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது குறித்து 

ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட் -19 தடுப்பு செயலணி கூடும் போது சுகாதாரத் துறை எழுப்பியுள்ள சில பிரச்சினைகள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை மருத்துவ சங்கம் (SLMA), அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) உட்பட நான்கு மருத்துவ சங்கங்கள் 14 நாட்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு