அச்சுறுத்தும் வகையில் நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு..! நேற்றும் 44 பேர் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
அச்சுறுத்தும் வகையில் நாட்டில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு..! நேற்றும் 44 பேர் உயிரிழப்பு..

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துவரும் நிலையில் நேற்றய தினம் 44 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 

மன்னார், ஹொரணை, கல்பாத, அநுராதபும், கண்டி, பேருவளை, கொழும்பு-2 மற்றும் றாகம, காலி, பன்னிபிட்டிய, ஹோமாகம, அத்துருகிரிய, மத்துகம, களுத்துறை வடக்கு, வலல்லாவிட்ட, பயாகல ஆகிய பகுதிகளில் மரணங்கள் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர்களில் 30 ஆண்களும் 14 பெண்களும் அடங்குவதாகவும் இவ்வாறு உயிரிழந்தவர்களின் 23 பேர் 71 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா தொற்று உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 1,132 ஆக உயர்வடைந்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு