நாளை யாழ்.வருகிறார் சந்திரிக்கா..

ஆசிரியர் - Editor I
நாளை யாழ்.வருகிறார் சந்திரிக்கா..

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்க செயலணியின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்.மாவட்டத்திற்கு வருகிறார். 

3 நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை காலை யாழ்.வரும் சந்திரிக்கா ப ண்டாரநாயக்க யாழ்.மாவட்ட செயலகத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வார்.

இந்நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வடமாகாண ஆளுநர் றெ ஜினோல்ட் கூரே உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளார்கள். 

மேலும் சந்திரிக்கா பண்டாரநாயக்க 3 நாள் விஜயமாக யாழ்.வரும் சந்திரிக்கா அம்மையார் ஒரு நிகழ்வில் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளார். 

தொடர்ந்து ஞாயிற்று கிழமை அரியாலை, மருதங்கேணி, காரைநகர் உள்ளிட்ட பல இடங்களுக்கும் செல்லவுள்ளார்.

தொடர்ந்து திங்கள் கிழமை காலை கிளிநொச்சி மாவட்டத்திற்கு சென்று அங்கு பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு