10 நாட்களுக்கு சகல விமான சேவைகளும் இரத்துச் செய்யப்படுகிறது..! சிவில் விமான போக்குவரத்து சேவைகள் ஆணையகம் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
10 நாட்களுக்கு சகல விமான சேவைகளும் இரத்துச் செய்யப்படுகிறது..! சிவில் விமான போக்குவரத்து சேவைகள் ஆணையகம் அறிவிப்பு..

நாளை மறுதினம் 21ம் திகதி இரவு 11.59 தொடக்கம் எதிர்வரும் 31ம் திகதி இரவு 11.59 வரையில் நாட்டிலுள்ள சகல விமான நிலையங்களும் மூடப்படுவதாகவும், சகல விமான சேவைகளும் நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த தகவலை சிவில் விமான போக்குவரத்து ஆணையக தலைவர் உபுல் தர்மதாஸ கூறியுள்ளார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், 

நாட்டிலிருந்து வெளியேற இக்காலத்தில் அனுமதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு