பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்படும்..! போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்படும்..! போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு..

நாடு முழுவதும் எதிர்வரும் 21ம் திகதி தொடக்கம் பொது போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெறப்போவதில்லை. என போக்குவரத்து அமைச்சர் தொிவித்திருக்கின்றார்.

நாடு முழுவதும் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள நிலையில், கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் 

கருத்து தெரிவிக்கும்போதே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

அத்தியவசிய சேவைகளில் ஈடுபடுகின்றவர்கள் கோரிக்கை விடுத்தால் அதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை போக்குவரத்தில் 

ஈடுபடுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா கட்டுப்பாட்டுக்கான இறுதித் தீர்வு பயண கட்டுப்பாடு விதிப்பது 

அல்ல என்றும் இதற்கான தடுப்பூசியை வழங்குவதே சிறந்த தீர்வாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு