இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா..! மனைவி உயிரழந்து 3 நாட்களில் கணவனும் உயிரிழப்பு, 6 பேர் தனிப்படுத்தலில்..

ஆசிரியர் - Editor I
இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா..! மனைவி உயிரழந்து 3 நாட்களில் கணவனும் உயிரிழப்பு, 6 பேர் தனிப்படுத்தலில்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான கணவன் மனைவி உயிரிழந்திருக்கின்றனர். குறித்த சம்பவம் பொகவந்தலாவை - ஸ்ரீபுர பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. 

கொரோனா தொற்றால் மனைவி உயிரிழந்த 3 நாட்களுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் கணவன் உயிரிழந்துள்ளார்.

3 பிள்ளைகளின் தாய் கடந்த 13 ஆம் திகதி பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அன்றைய தினமே மரணித்திருந்தார்.

68 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக பொகவந்தலாவை சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

நேற்றைய தினமே உயிரிழந்த பெண் தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

அன்றைய தினம் இரவே தொற்றாளரான 76 வயதான எஸ்.வடிவேல் என்ற பெண்ணின் கணவரும் உயிரிழந்துள்ளார். 

அவர்களுடைய தொடர்பிலும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இருவரின் சடலங்களும் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தில் உள்ள ஏனைய 6 அங்கத்தவர்களும் தற்போது சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு