யாழ்.கொடிகாமம் சந்தை, மற்றும் இரு கிராமசேவகர் பிரிவுகள் நாளை முடக்கலில் இருந்து விடுவிக்கப்படுகிறது..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொடிகாமம் சந்தை, மற்றும் இரு கிராமசேவகர் பிரிவுகள் நாளை முடக்கலில் இருந்து விடுவிக்கப்படுகிறது..! மாகாண சுகாதார பணிப்பாளர் தகவல்..

யாழ்.கொடிகாமம் பகுதியில் முடக்கப்பட்டுள்ள சந்தை மற்றும் இரு கிராமசேவகர் பிரிவுகள் நாளை காலை முதல் விடுவிக்கப்படுவதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

எழுமாற்று பரிசோதனையில் கொடிகாமம் சந்தை மற்றும் சந்தையுடன் தொடர்புடைய சிலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சந்தை முடக்கப்பட்டதுடன், கொடிகாமம் மத்தி, கொடிகாமம் வடக்கு கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டது. 

இந்நிலையில் பூரணமான பாதுகாப்பு உறுதியானதை தொடர்ந்து சந்தை மற்றும் இரு கிராமசேவகர் பிரிவுகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் தொிவித்திருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு