திரிபடைந்த ஆபத்தான கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சமூகத்தில் நடமாடுகின்றனர்..! சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
திரிபடைந்த ஆபத்தான கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சமூகத்தில் நடமாடுகின்றனர்..! சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

திரிபடைந்த ஆபத்தான கொரோனா தொற்றுடன் சமூகத்தில் பலர் நடமாடுகிறார்கள். என சுகாதார அமைச்சின் தலமை தொற்றுநோயியல் நிபுணர் சுடத் சமரவீர எச்சரித்துள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், புதிய திரிபடைந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் சமூகத்திற்குள் காணப்படலாம் என அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார். 

இலங்கைக்குள் வருபவர்களை சோதனையிடும் மாதிரிகளை பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய திரிபடைந்த வைரசினால் ஆரம்பகட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள இன்னமும் அடையாளம் காணப்படாத சிலர் சமூகத்திற்குள் நடமாடும் சாத்தியக்கூறுகள் உள்ளன 

என சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு