உடன் அமுலுக்கு வரும் வகையில் 4 மாவட்டங்களில் 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்..! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
உடன் அமுலுக்கு வரும் வகையில் 4 மாவட்டங்களில் 6 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்..! இராணுவ தளபதி அறிவிப்பு..

உடன் அமுலுக்கும் வரும் வகையில், 4 மாவட்டங்களின் 6 கிராம சேவகர் பிரிவுகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதன்படி மாத்தறை மாவட்டம் -  மாத்தறை பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட  உயன்வத்த வடக்கு கிராம சேவகர் பிரிவு, உயன்வத்த கிராம சேவகர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டம் - கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட  வலகம்பாய கிராம சேவகர் பிரிவிலுள்ள  கொஸ்கஸ்தன்ன மற்றும்  திப்புட்ட ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மாத்தளை மாவட்டம் - ரத்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட  உடஹவிட்ட கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் புத்தளம் மாவட்டம்- கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட மெதகிரியான கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குருணாகல் மாவட்டம் - கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட  நிகதலுபொத கிராம சேவகர் பிரிவு, தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு