நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அல்லது 75 வீதம் முடக்குவதற்கு தயாராக இருங்கள்..! பஷில் ராஜபக்‌ஷ ஐனாதிபதி செயலணி அதிகாரிகளுக்கு வழங்கிய உத்தரவு..

ஆசிரியர் - Editor I
நாட்டை முழுமையாக முடக்குவதற்கு அல்லது 75 வீதம் முடக்குவதற்கு தயாராக இருங்கள்..! பஷில் ராஜபக்‌ஷ ஐனாதிபதி செயலணி அதிகாரிகளுக்கு வழங்கிய உத்தரவு..

நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடையும் நிலையில் நாட்டை முழுமையாக அல்லது 75 சதவீதம் முடக்குவதற்கு தயாராக இருக்குமாறு பசில் ராஜபக்‌ஷ ஜனாதிபதி செயலணியின் தலைமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தலைவர்கள் கலந்துரையாடலுக்கு வரவழைக்கப்பட்டனர். எதிர்காலத்தில் நாட்டில் ஊரடங்கு உத்தரவு இருக்காது என்றும் பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதுபோன்ற சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அந்த நிறுவனங்களின் தலைவர்கள் நீண்ட விவாதங்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு