"மாயபுர" சிங்கள குடியேற்றம் தொடர்பில் ஆராய வடமாகாணசபையில் விசேட அமர்வு.

ஆசிரியர் - Editor I

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபை தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்குவதன் ஊடாக மாய புர என்ற பெயரில் பாரியளவு சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கு திட்டமிடுவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ர விகரன் இன்று மாகாணசபையில் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்கமைய மேற்படி மாயபுர சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவது தொடர்பாக ஆராய்வதற்காக விசேட அமர்வு ஒன்று சித்திரை 5ம் திகதி நடைபெறவுள்ளது.

இன்றைய தினம் வடமாகாணசபையின் 119வது அமர்வு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றி ருந்தது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மேற்படி மாயபுர சிங்கள குடியேற்றம் தொடர்பாக வி சேட கவனயீர்;ப்பு பிரேரணை ஒன்றை சபைக்கு சமர்பித்தார். இதன்போது ரவிகரன் உரையாற்றுகையில், மகாவலி அதிகாரசபை தனது செயற்றிட்ட பகுதியை விரிவாக்குவதன் ஊடாக மாயபுர என்ற பெயரில் பாரிய சிங்கள குடியே

ற்றம் ஒன்றுக்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. இதன் ஊடாக கொக்கிளாய், கொக்குதொடுவாய், க ருணாட்டு கேணி மற்றும் நாயாறு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதன் மூலம் சுமார் 7 ஆயிரம் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் வாழும் சிங்கள மக்களை வெலி ஓயா என அழைக்கப்படும் 

தனி சிங்கள பிரதேச செயலர் பிரிவுடன் இணைப்பதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது. இதனால் பெரும் பாதிப்பு உண்டாகப்போவதாக சுட்டிக்காட்டினார். இதனை தொடர்ந்து மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் கருத்து தெரிவிக்கையில், இந்த விடயம் ஒரு பாரதூரமான விடயமாகும். இந்த விடயம் தொடர்பாக அனைவரு ம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றார். தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா கருத்து தெரிவி

க்கையில், மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் பேசி வருகின்றார். ஒ ருதடவை இது தொடர்பாக பேசும்போது மாகாணசபை உறுப்பினர்களை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருமா று அழைத்திருந்தார். ஆனாலும் மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் செல்லவில்லை. இந்நிலையில் இந்த மாய புர என்ற பெயரில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய சிங்கள குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்ப

தற்கு விசேட அமர்வு ஒன்றை நடத்தவேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த விடயம் தொ டர்பாக சுட்டிக்காட்டி அவர்களும் மத்தியில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் கூறினார். இதற்கi மய விசேட அமர்வு ஒன்றை எதிர்வரும் சித்திரை மாதம் 5ம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற து. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு