நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் 138 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்..! இன்று 64 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் 14 மாவட்டங்களில் 138 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்..! இன்று 64 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கம்..

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் 14 மாவட்டங்களில் சுமார் 138 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டிருப்பதாக தேசிய கொவிட் தடுப்பு செயலணி கூறியிருக்கின்றது. 

இன்று காலை முதல் ஐந்து மாவட்டங்களின் 21 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதேநேரம், குருநாகல் மாவட்டத்தில் 19 கிராம சேவகர் பிரிவுகள் தவிர்ந்த 

63 கிராமசேவகர் பிரிவுகளும், அம்பாறை மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவுமாக 64 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு