வீடுகளிலும் நிகழ்வுகளுக்கு தடை..! உறவினர் வீடுகளுக்கு செல்வது, அயல் வீடுகளுக்கு செல்வதையும் தவிருங்கள், இராணுவ தளபதி மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
வீடுகளிலும் நிகழ்வுகளுக்கு தடை..! உறவினர் வீடுகளுக்கு செல்வது, அயல் வீடுகளுக்கு செல்வதையும் தவிருங்கள், இராணுவ தளபதி மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..

விருந்துபசாரங்கள், கூட்டங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலும் நடாத்த முடியாது. என இராணுவ தளபதி, கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்தவரும் நிலையில் மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் திருமண நிகழ்வுகள், விருந்துபசாரங்கள், கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் வீடுகளிலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள், விருந்துபசாரங்கள், கூட்டங்களை நடாத்த அனுமதியில்லை. என கூறியிருக்கும் இராணுவ தளபதி, 

கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை அத்தியாவசிய தேவையில்லாமல் அயல் வீடுகளுக்கு செல்வது, உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு செல்வது மற்றும் உறவினர்களை அழைப்பதையும் நிறுத்துமாறு

இராணுவ தளபதி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு