வெறிச்சோடும் பொது போக்குவரத்து சேவை..! இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
வெறிச்சோடும் பொது போக்குவரத்து சேவை..! இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படுகிறது..

இ.போ.சபையின் பேருந்து சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தூர இடங்களுக்கான பஸ் சேவைகளை இரத்து செய்ய நேரிட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ஏ.எச். பண்டுக்க சுவர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாளை முதல் தனியார் பஸ் சேவைகளையும் 25 வீதமாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால் தூர இடங்களுக்கான மற்றும் நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில்கள் சிலவற்றை இரத்து செய்துள்ளதாக 

ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு