நாட்டில் கொரோனா பரவல் தீவிரம்..! யாழ்.நயினாதீவில் தேசிய வெசாக் பண்டிகை ஒழுங்குகள் முழுவீச்சில்..

ஆசிரியர் - Editor I
நாட்டில் கொரோனா பரவல் தீவிரம்..! யாழ்.நயினாதீவில் தேசிய வெசாக் பண்டிகை ஒழுங்குகள் முழுவீச்சில்..

நாட்டில் கொரோனா அபாய நிலைமை தீவிரமாகிவரும்  நிலையில் யாழ்.நயினாதீவில் தேசிய வெசாக்  நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

இம்முறை தேசிய வெசாக் தினத்தை யாழ்.நயினாதீவில் நடாத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட நிலையில் வீதிகளை செப்பனிடுவதற்காக  கனரக வாகனங்கள் மற்றும் கட்டுமான மூலப்பொருட்கள்  கடல் வழியாக மிதக்கும் பாதையூடாக கொண்டுசெல்லப்படுகிறது.

 நயினாதீவில் இடம்பெறும் வெசா தின நிகழ்வுகளுக்கு தென் இலங்கையில் இருந்து அதிகப்படியானவர்கள் வருவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் குறித்த நிகழ்வுகள் தொடர்பான கலந்துரையாடல்  

நேற்று முன்தினம் புதன்கிழமை வடமாகாண ஆளுநர் பங்குபற்றுதலுடன் நயினாதீவில் இடம்பெற்றது. இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 

தெற்கில் இருந்து குறித்த நிகழ்வுக்கு வருவோரால் யாழ்.மாவட்டத்தில் தொற்றாளர்களை அதிகரிக்கச் செய்யும் என அச்சம் வெளியிடப்படுகிறது .

அண்மையில் யாழ்.நாச்சிமார் கோயிலில் இடம்பெற்ற தேர் உற்சவத்தில் அதிகளவிலான மக்கள் சுகாதார வழிகாட்டல் களைப் பேணவில்லை  என பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு