சாரதிக்கு திடீர் சுகயீனம்..! கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பேருந்து, சுமார் 20 பேர் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
சாரதிக்கு திடீர் சுகயீனம்..! கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பேருந்து, சுமார் 20 பேர் படுகாயம்..

நுவரெலியா - ஹைய்பொரஸ்ட் பிரதேசத்திலிருந்து இராகலை நோக்கி பயணித்த தனியார் பேருந்து மாகுடுகல பகுதியில் உள்ள மரக்கறி தோட்டம் ஒன்றில் கட்டுப்பாட்டை இழந்து 20 ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தக்குள்ளானது. 

இன்று நண்பகல் 12 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்த 20 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பஸ் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக சாரதி கட்டுப்பாட்டை இழந்ததனால் இந்த விபத்து நேர்ந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இவ்விபத்தில் காயமடைந்த 20 பேரும், ஹைய்பொரஸ்ட் வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், 

அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இவ்விபத்து தொடர்பில்

 இராகலை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு