யாழ்.மாவட்டத்தில் தேசிய வெசாக் தினம்..! நயினாதீவில் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் உயர்மட்ட கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தேசிய வெசாக் தினம்..! நயினாதீவில் ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் உயர்மட்ட கலந்துரையாடல்..

2021ம் ஆண்டுக்கான தேசிய வெசாக் பண்டிகையை யாழ்.நயினாதீவில் கொண்டாடுவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்றய தினம் நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த கலந்துரையாடலில், வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ், வணக்கத்திற்குரிய விகாராதிபதி நவதகலபதுமகீர்த்தி தேரோ, வெசாக் பண்டிகை நடாத்துவது தொடர்பான முன்னேற்பாடுகள், 

ஒழுங்கமைப்புகள் தொடர்பாக கலந்துரையாடினர். இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் நயினாதீவு பிரதேச செயலாளர் 

ஆகியோர் கலந்துகொண்டனர். கடந்த சில வாரங்களாக தேசிய மற்றும் மாகாண ரீதியில் நடைபெற்ற தேசிய வெசாக் பண்டிகைக்கான கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் 

முன்னேற்பாடுவேலைகள் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட வேலைகளின் கள நிலவரத்தை ஆய்வு செய்த  ஆளுநர், 

தலைமை விகாராதிபதியை சந்தித்து மேலதிக ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்தாலோசித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு