யாழ்.நாச்சிமார் கோவில் தலைவர், செயலாளர் கைது..! யாழ்.மாவட்டத் கொரோனா பரவலுக்கு வழிசமைத்ததாக குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாச்சிமார் கோவில் தலைவர், செயலாளர் கைது..! யாழ்.மாவட்டத் கொரோனா பரவலுக்கு வழிசமைத்ததாக குற்றச்சாட்டு..

யாழ்.வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி தேர் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலய நிர்வாகத்தின் தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாட்டில் கொவிட்-19 கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளை மீறி ஆலயத் திருவிழாவை நடத்தியதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை ஏற்படுத்த வழிசமைத்த 

குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய தலைவர், செயலாளர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

யாழ். நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கு நாளைமறுதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவுள்ளது.  அதனால் இருவருக்கும் இன்று இரவு பொலிஸ் பிணை வழங்கப்படவுள்ளது. யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்று வருகிறது. 

நேற்றுமுன்தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றிருந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு