யாழ்.மந்திரிமனை கிராமத்திற்குள் புகுந்து வாள்வெட்டு..! இருவர் போதனா வைத்தியசாலையில் அனுமதி, 7 பேர் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மந்திரிமனை கிராமத்திற்குள் புகுந்து வாள்வெட்டு..! இருவர் போதனா வைத்தியசாலையில் அனுமதி, 7 பேர் கைது..

யாழ்.புத்துார் - மந்திரிமனை கிராமத்திற்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவர்களே ஆயுதங்களால் தாக்கியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 

மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே யாழ்.தென்மராட்சி கெற்பேலி பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். 

தாக்குதலுக்கு இலக்கான 25 வயதான இளைஞர் காயங்களுடன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஒருவரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு