யாழ்.போதனா வைத்தியசாலையில் காவலாளியாக பணியாற்றிய 20 வயதான இளைஞனை காணவில்லை..! வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
யாழ்.போதனா வைத்தியசாலையில் காவலாளியாக பணியாற்றிய 20 வயதான இளைஞனை காணவில்லை..! வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..

யாழ்.அராலி பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞன் ஒருவன் வேலைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அராலி மத்தியை சேர்ந்த நாதன் ஜெசின்தன்(வயது20) என்ற இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளார். கடந்த 23ம் திகதி வேலைக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயுள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் காவலாளியாக கடமைபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 2021.04.23 அன்று இரவு நேரக் கடமைக்கு சென்றுள்ள நிலையில் 

அவர் இன்னமும் திரும்பி வரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 

கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கவும் 0775714031



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு