மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு..! பற்றைக்குள் மறைந்திருந்த மகன் கைது, யாழ்.திருநெல்வேலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழப்பு..! பற்றைக்குள் மறைந்திருந்த மகன் கைது, யாழ்.திருநெல்வேலியில் சம்பவம்..

யாழ்.திருநெல்வேலியில் குடும்ப தகராறு காரணமாக மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் தாக்குதல் நடத்திய மகன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் திருநெல்வேலி - கலாசாலை வீதியில் நேற்றயதினம் இரவு இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் இராசமணி  இரத்தினசிங்கம் (வயது52) என்பவரே அடித்து கொல்லப்பட்டிருக்கின்றார். மதுபோதையில் வீட்டுக்கு வந்த குறித்த நபர், 

மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகன் தந்தையை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். 

மேலும் ஒருவரும் அவர் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றார். இ்ந்நிலையில் சுயநினைவற்று கிடந்த நபரை காலையில் எழுப்ப முயன்றபோது அவர் உயிரிழந்தமை தொியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் கோப்பாய் பகுதியில் பற்றைக்காடு ஒன்றுக்குள் மறைந்திருந்த மகனை கைது செய்துள்ளதுடன், 

தாக்குதல் நடத்திய மற்றய நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு