சுகாதார அமைச்சர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்..! கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட 3 பேர் இரத்தம் உறைவினால் உயிரிழப்பு..

ஆசிரியர் - Editor I
சுகாதார அமைச்சர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்..! கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட 3 பேர் இரத்தம் உறைவினால் உயிரிழப்பு..

கொவிட் 19 தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 3 பேர் இரத்தம் உறையும் பிரச்சினையினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறியுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா இன்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கும் பதிலளிக்கும்போதே சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் அஸ்ட்ராஜெனோகா கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் ஆறு பேரிடையே இரத்தம் உறைவு தொடர்பான சிக்கல் பதிவானது.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பின்னர் உயிரிழந்துவிட்டனர் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அஸ்ட்ராஜெனோகா கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 

பலர் இரத்த உறைவுச் சிக்கலால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகள் இந்தத் தடுப்பூசி பாவனையை இடைநிறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு