இலங்கையில் கொரோனா பரவல் இந்தியாவைபோல் மோசமாக அதிகரிக்கும்..! பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் கொரோனா பரவல் இந்தியாவைபோல் மோசமாக அதிகரிக்கும்..! பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை..

இந்தியாவை ஒத்ததான கொரோனா பரவல் நிலையை நோக்கியே இலங்கை நகர்ந்து கொண்டிருப்பதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

பிசிஆர் மற்றும் துரிதஅன்டிஜென் சோதனையை நாளாந்தம் பத்தாயிரம் என்ற அளவிற்கு அதிகரிக்காவிட்டால் இந்தியா தற்போது எதிர்கொள்ளும் நிலைமை போன்ற ஆபத்தான நிலை 

இலங்கையில் ஏற்படலாம் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேஸ்பாலசூரிய தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களிறகு முன்னர் சுகாதார விதிமுறைகளை முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்ட பகுதிகளில் 

போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததன் காரணமாக அடுத்த 14 நாட்களில் அதன் விளைவுகளை எதிர்பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாளாந்தம் 5000 பிசிஆர் அல்லது அன்டிஜென் சோதனைகளே இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள அவர் இதனை பத்தாயிரமாக அதிகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

குருநால் புத்தளம் கொழும்பு கம்பஹா திருகோணமலை யாழ்ப்பாணம் போன்றவையே அதிகளவு பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக காணப்படுகின்றன என தெரிவித்துள்ள அவர் 

கடந்த சில வாரங்களில் இந்த பகுதிகளில் இருந்து அதிகளவு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மே முதலாம் திகதி முதல் அதிகளவு பிசிஆர் அன்டிஜென் சோதனைகளை முன்னெடுத்தால் அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என கருதுகின்றோம் என தெரிவித்துள்ள அவர் 

நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடு;த்து சோதனைகளை அதிகரிக்காவிட்டால் இந்தியாவில் நடப்பது இங்கும் நடக்கலாம் என பாலசூரிய தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு