இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை சிறப்பு நடவடிக்கையில் பொலிஸார்..!

ஆசிரியர் - Editor I
இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை சிறப்பு நடவடிக்கையில் பொலிஸார்..!

நாடு மழுவதும் இன்று நண்பகல் 12 மணி தொடக்கம் நாளை காலை 6 மணிவரை பொலிஸார் சிறப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியிருக்கின்றார். 

மேலும் கடந்த 13ஆம் திகதி தொடக்கம் இன்று காலை 6 மணி வரை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, மது அருந்தி வாகனம் செலுத்திய 1834பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இவ்வாறு மது அருந்தி வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் மற்றும் அனைத்து பிரதேச பிரிவுகளுக்கு பொறுப்பாகவுள்ள அதிகாரிகளுக்கு, 

பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளதென அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த விசேட சோதனை நடவடிக்கை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை நடைபெறுமெனவும் அவர் கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு