சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளில் எந்த ஒரு தளர்வும் கிடையாது..! மேலும் இறுக்கமாக பின்பற்றப்படும், இராணுவ தளபதி விளக்கம்..

ஆசிரியர் - Editor I
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளில் எந்த ஒரு தளர்வும் கிடையாது..! மேலும் இறுக்கமாக பின்பற்றப்படும், இராணுவ தளபதி விளக்கம்..

இலங்கையின் அயல் நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடையும் நிலையிலேயே சுகாதார பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மிக இறுக்கமாக கடைப்பிடிப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், சர்வதேச அளவில் குறிப்பாக அயல்நாடுகளில் கொரோனாவைரஸ் வேகமாக பரவுவது குறித்து நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம். இலங்கைக்குள் வருபவர்களை இலக்குவைத்து நாங்கள் இறுக்கமான தனிமைப்படுத்தல் நடைமுறைகளை 

பின்பற்றுவதற்கு இதுவே காரணம் என தெரிவித்துள்ளார். இறுக்கமான நடைமுறைகளை தளர்த்தவேண்டும் என வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன ஆனால் சர்வதே மற்றும் ஆசிய பிராந்திய நடைமுறைகளை பார்க்கும்போது அதனை அடிப்படையாக வைத்து 

நாங்கள் முடிவுகளை எடுக்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு