யாழ் மாநகர சபையின் புதிய மேயராக தெரிவுசெய்யப்பட்ட உள்ளவர் யார்?

ஆசிரியர் - Admin
யாழ் மாநகர சபையின் புதிய மேயராக தெரிவுசெய்யப்பட்ட உள்ளவர் யார்?

யாழ்  மாநகர சபையின் புதிய மேயராக  தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த இமானுவேல் ஆனல்ட் அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக உள்ள மணிவண்ணன் வருவாரா என்கின்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மாநகர சபை ஆணையாளரின் தலைமையில் ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் புதிய முதல்வர்  இரகசிய வாக்கெடுப்பின் மூலமா அல்லது திறந்த வாக்களிப்பு மூலமா  தெரிவு செய்யப்படுவார் என்கின்ற சந்தேகம் வலுத்து வருகின்றது.

இந்த முதல்வர் தெரிவு  இரகசிய வாக்கெடுப்பில் முடியுமானால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சட்டத்தரணி மணிவண்ணனுக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்டுகின்றது.

இதே வேளை திறந்த வாக்களிப்பு நடாத்தப்படுமானால் ஆனோல்டை விட மணிவண்ணன் முதல்நிலையில் வருவார் என்கின்ற சந்தேகமும் தற்போது வலுத்துள்ளது.

அத்துடன் ஈபிடிபி கட்சி தற்போது வரை திரிசங்கு நிலையில் தனது ஆதரவு எந்த கட்சிக்கு வழங்குவது என சிந்தித்து வருகின்றது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு