கட்டுப்பாடற்ற வேகம்..! கனரக வாகனத்துடன் மோதி விபத்து 22 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

ஆசிரியர் - Editor I
கட்டுப்பாடற்ற வேகம்..! கனரக வாகனத்துடன் மோதி விபத்து 22 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..

கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்தக்குள்ளானதில் 22 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். 

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் களுகொவுத்தென கம்பி பாலத்திற்கு அருகில் இவ்விபத்து 04.04.2021 அன்று காலை இடம்பெற்றுள்ளது.

டயகம பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்ற மோட்டர் சைக்கிளும், யட்டியாந்தோட்டை பகுதியிலிருந்து 

ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கனரக வாகனம் ஒன்றும் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டர் சைக்களின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.மோட்டர் சைக்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே

இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

எனினும் கனரக வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் டயகம முதலாம் பிரிவைச் சேர்ந்த அதிர்ஷ்டநாதன் கோபிநாதன் (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு