கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்தில் சிக்கியது..! 7 பேர் பலி, 20 பேர் படுகாயம், பலர் கவலைக்கிடம்..

ஆசிரியர் - Editor I
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கோர விபத்தில் சிக்கியது..! 7 பேர் பலி, 20 பேர் படுகாயம், பலர் கவலைக்கிடம்..

கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்து பயணிகள் பேருந்து பசற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 7 பேர் பலியானதுடன் 20 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

இன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்ற குறித்த கோர விபத்தில் லுணுகலவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தொன்றே சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் மேலும் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

இந்த விபத்து தொடர்பில பஸ்ஸர பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு