பரபரப்பாகும் தெற்கு அரசியல்..! பிரதமர் மஹிந்த சரத் பொன்சேகா இடையில் பேச்சு, சஜித் பிறேமதாஸ விமல் வீரவங்ச இடையில் சந்திப்பு..

ஆசிரியர் - Editor I
பரபரப்பாகும் தெற்கு அரசியல்..! பிரதமர் மஹிந்த சரத் பொன்சேகா இடையில் பேச்சு, சஜித் பிறேமதாஸ விமல் வீரவங்ச இடையில் சந்திப்பு..

தெற்கு அரசியலில் பரபரப்பான நிலை தற்போது காணப்படுவதாக தெற்கு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்படி எதிர்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸவுக்கும் அமைச்சர் விமல் வீரவங்ஸவுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருக்கும் தகவல் கசிந்துள்ளது. 

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா திருமண நிகழ்வு ஒன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. குறிப்பாக எதிர்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர் இடையிலன சந்திப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் டிறான் அலசின் வீட்டில் இடம்பெற்றதாகவும் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் மிக இரகசியமாக பேணப்படுவதாகவும் கூறப்படும் அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெத ஆராய்ச்சியின் மகளுடைய திருமண நிகழ்வில் 

பிரதமர் மற்றும் பீல்ட் மார்ஷல் இடையில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தெற்று அரசியலில் பரபரப்பான நிலை தற்போது காணப்படுவதாக அவதானிகள் கூறுகின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு