அரச திணைக்களங்கள், நிறுவனங்களுக்குள் திடீரென நுழையப்போகும் விசேட கண்காணிப்பு குழு..! அரச ஊழியர்கள் கவனத்திற்கு..

ஆசிரியர் - Editor I
அரச திணைக்களங்கள், நிறுவனங்களுக்குள் திடீரென நுழையப்போகும் விசேட கண்காணிப்பு குழு..! அரச ஊழியர்கள் கவனத்திற்கு..

அரசாங்க திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் விசேட சோதனை நடவடிக்கையினை நடத்துவதற்கான வேலைத்திட்டத்தின் 1ம் கட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

அரச நிறுவனங்களில் இடம்பெறும் தவறுகளை குறைத்து, பொதுமக்களுக்கு செயல்திறன்மிக்க சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்திம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

நாளை ஆரம்பிக்கப்படும் இந்தத் திட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.இந்தப் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் 28 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு