வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு..! அடுத்தவாரம் வழிகாட்டில் வெளியிடப்படுகிறது..

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு..! அடுத்தவாரம் வழிகாட்டில் வெளியிடப்படுகிறது..

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் இலங்கையர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய சுகாதார வழிகாட்டல்களை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. 

இதன்படி எதிர்வரும் வாரத்தில் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

விசேடமாக கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டு நாட்டிற்கு வரும் இலங்கையர்களை அவர்களது வீட்டில் சுய தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் மற்றும் நாட்டிற்கு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமை தொடர்பில் இந்த புதிய சுகாதார வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை நாட்டிலிருந்து குறுகிய காலத்திற்காக வெளிநாடு சென்று மீண்டும் நாட்டுக்கு வருபவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிவழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. 

கடந்த 10ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் விசேட அரச பயணங்கள், உத்தியோகபூர்வ பயணங்கள் மற்றும் வர்த்தகரீதியான பயணங்களின் பின்னர் நாட்டிற்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு