SuperTopAds

தென்னாபிரிக்காவில் பரவும் புதியவகை கொவிட்-19 வைரஸ் இலங்கையை பாதிக்கும்..! பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமலிருப்பது பாரிய தவறு..

ஆசிரியர் - Editor I
தென்னாபிரிக்காவில் பரவும் புதியவகை கொவிட்-19 வைரஸ் இலங்கையை பாதிக்கும்..! பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காமலிருப்பது பாரிய தவறு..

தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதியவகை கொவிட்-19 வைரஸ் இலங்கையில் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தாவிட்டால் புதிய வகை கொரோனா அலை உருவாவதை தடுக்க முடியாது. 

மேற்கண்டவாறு இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து சங்கம் மேலும் தொிவித்துள்ளதாவது, தென்னாபிரிக்காவில் பரவிய வைரஸ் தொற்று இங்குள்ள வைரஸ் தொற்று வகைக்கு இணையானது எனவும் அது மிக வேகமாக 

மற்றவர்களுக்கு பரவக்கூடும் எனவும் புதிய அலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் இலங்கை முதுமை நோய் மருத்துவ விஞ்ஞான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன குறிப்பிட்டார். மேலும், அவசர சிகிச்சைகளுக்கான தேவை அதிகரிக்கும் எனவும் 

உயிரிழப்போரின் எண்ணிக்கை உயரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.ஏதேனுமொரு விதத்தில் இலங்கையில் பரவினால் கட்டுப்படுத்தும் இயலுமை இருக்காது. தற்போது தொற்றுக்குள்ளானவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படலாம். 

அதேபோன்று, தற்போதைக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிக்கும் சிறந்த பாதுகாப்பு உறுதி அளிக்கப்படாது. ஏற்கனவே தொற்றுக்குள்ளானவரின் இரத்தத்தை இந்த வைரஸ் தன்மை தொற்றியவர்களுக்கு பயன்படுத்த முடியாது போகும் 

என விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன மேலும் தெரிவித்தார்.இதேவேளை, இலங்கையர்களும் வௌிநாட்டவர்களும் நாட்டுக்கு வருகை தரும் போது பின்பற்றப்பட வேண்டிய படிமுறைகள் அடங்கிய புதிய வழிமுறைகளை 

சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ளது.அதற்கமைய, இரண்டு வாரங்களுக்கு முன்னர் சகல தகவல்களுடன் பூரண அனுமதியை சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த வழிமுறைகளுக்கு அமைவாக அரசாங்கம் பரிந்துரைத்த தடுப்பூசியை இரண்டு தடவைகளும் ஏற்றியவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதில்லை.