கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் படுகாயம்..! சாரதியின் கவனயீனமே காரணமாம்..

ஆசிரியர் - Editor I
கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் படுகாயம்..! சாரதியின் கவனயீனமே காரணமாம்..

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து எல்ல அல்ப்ப பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. 

பஸ் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 35 பேரில், 10 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர், ஏனையோர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இவர்கள் பதுளை மற்றும் தெமோதர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. 

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு