பொலிஸ் ஜீப் வண்டியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோத கோர விபத்து..! 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி, 3 பேர் ஆபத்தான நிலையில்..

ஆசிரியர் - Editor I
பொலிஸ் ஜீப் வண்டியும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோத கோர விபத்து..! 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி, 3 பேர் ஆபத்தான நிலையில்..

பொலிஸ் வாகனத்துடன் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். 

குறித்த சம்பவம் கட்டுபெத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் ஜீப் வண்டியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதுண்டமையினாலேயே 

இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்து நடந்த நேரத்தில் அனுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் இருந்துள்ளனர்.முச்சக்கர வண்டியின் 48 வயதுடைய சாரதியும், அவரது 69 வயதுடைய தயாருமே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

அதேநேரம் காயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டி சாரதியின் மனைவி மற்றும் இரண்டு மகள்களும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸ் ஜீப்பின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சிறப்பு விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு