நீர் வீழ்ச்சியில் மூழ்கிய 9 வயதான சிறுவன் உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
நீர் வீழ்ச்சியில் மூழ்கிய 9 வயதான சிறுவன் உயிரிழப்பு..!

தியலும நீர் வீழ்ச்சியில் மூழ்கிய 9 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்திருக்கின்றனர். 

நேற்று மாலை நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது அவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின சடலத்தை குறித்த கிராம பகுதி மக்கள் அனைவரும் இணைந்து நீர்வீழ்ச்சியிலிருந்து மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் மாகந்துரை, மாவரெல்லை பகுதியைச் சேர்ந்தவன் என கொஸ்லாந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு