காங்கேசன்துறை வீதி தொடக்கம் இராசாவின் தோட்டம் வீதி வரை வடிகால், வாகன தரிப்பிடம், நடைபாதையுடன் வீதி அகலமாக்கப்படவுள்ளது..

ஆசிரியர் - Editor I
காங்கேசன்துறை வீதி தொடக்கம் இராசாவின் தோட்டம் வீதி வரை வடிகால், வாகன தரிப்பிடம், நடைபாதையுடன் வீதி அகலமாக்கப்படவுள்ளது..

யாழ்.நகரில் காங்கேசன்துறை வீதி தொடக்கம் இராசாவின் தோட்ட வீதி வரையிலான ஸ்ரான்லி வீதியின் இரு பக்கங்களிலும் வாகன தரிப்பிடம் மற்றும் நடைபாதை அமைக்க வீதியை அகலிக்கும் பணி நடைபெறவுள்ளது. 

குறித்த வீதியில் உள்ள சகல வர்த்தகர்களினதும் சம்மதம் மற்றும் ஒத்துழைப்புடன் வீதியின் இரு பக்கங்களிலும் வர்த்தக நிலையங்களுக்கான வாகனத்தரிப்பிடம் மற்றும் பாதசாரிகள் நடைபாதை வடிகால் அமைப்புடன் வீதியினை அகழிப்பது தொடர்பில் 

மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் வீதியின் இரு பக்கமும் எல்லைக் கோடு இடும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு