யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலையிலிருந்து திருப்பி அனுப்பபட்டனர்..! ஆசிரியையின் தாய்க்கு கொரோனா தொற்று..
யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியின் ஆசிரியை ஒருவருடைய தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியனதை தொடர்ந்து இன்று பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.
நேற்றய தினம் சாவகச்சேரி வைத்தியசாலையில் காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண் குறித்த பாடசாலை ஆசிரியை ஒருவரின் தாய் எனவும்
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றைய தினம் பாடசாலைக்கு சென்றிருந்த மாணவர்கள் வீடுகளுக்கே திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.