யாழ்.நாவற்குழியில் தொடர் கொள்ளை..! கொள்ளை கும்பல் பதுங்கியிருந்த இடம் முற்றுகை, 6 பேர் கைது, பொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாவற்குழியில் தொடர் கொள்ளை..! கொள்ளை கும்பல் பதுங்கியிருந்த இடம் முற்றுகை, 6 பேர் கைது, பொருட்கள் மீட்பு..

யாழ்.நாவற்குழி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொடர்ச்சியாக பொருட்களை கொள்ளையடித்துவந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

ஹனிமூன் ஹோட்டலுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த இலத்திரனியல் பொருட்கள் மற்றும் நிலத்திற்கு பதிக்கப்படும் மாபிள்கள் என பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்தது.

கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் நாவற்குழி - புதிய குடியிருப்பு பகுதியில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள் சிலருக்கு தகவல் கிடைத்த நிலையில் உரிமையாளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல்

வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை கைது செய்ததுடன் பொருட்களையும் மீட்டுள்ளனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு