குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு சென்றபோது காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவு சென்றபோது காணாமல்போன இரு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டது..!

புங்குடுதீவு - குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த இரு மீனவர்களில் ஒருவருடைய சடலம் நயினாதீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டிருக்கின்றது.

அவர்களை தேடி இரண்டு நாள்களாக முன்னெடுக்கப்பட்ட பணியில் நயினாதீவு முனை கடலிலேயே ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவானிலிருந்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்கு 

திரும்பிய மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமற்போயிருந்தனர். நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போயிருந்தனர்.

அவர்களில் நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20) என்ற இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றையவரைத் தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது என்றும் நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு