சட்டத்தரணி சுகாஸிடமும் வாக்குமூலம் பதிவு செய்த வல்வெட்டித்துறை பொலிஸார்..!

ஆசிரியர் - Editor I
சட்டத்தரணி சுகாஸிடமும் வாக்குமூலம் பதிவு செய்த வல்வெட்டித்துறை பொலிஸார்..!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை தொடர்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்த்தரும் சட்டத்தரணியுமான க.சுகாஸிடம் பொலிஸார் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்ற தடை உத்தரவை மீறி போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை தொடர்பாக சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்டோர் மீது பருத்துறை நீதிமன்றில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில்

இன்று மாலை தமிழ்தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் சட்டத்தரணி சுகாஸிடம் வல்வெட்டித்துறை பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு